தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக நியாய விலை கடைகளை மூடி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக தனித்துறை, 31% அகவிலைப்படி ,புதிய புதிய விற்பனை முனையம், மோடம் வழங்குதல் ஓய்வூதியம், சரியான விலையில் தரமான பொருட்களைத் தானமாக வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக இன்று தேனி மாவட்டம் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் 11அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்டத்தில் உள்ள 120 கடைகளில் 335 கடைகளை மூடி நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment