தேனி பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 6 May 2022

தேனி பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பா ரவிந்திரநாத் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வந்த கோரிக்கையடுத்து, மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு  மூன்றுசக்கர வாகனங்களை இலவசமாக வழங்கினார். 


கிருஷ்ணபிரபா, மணிகண்டன் (ஆண்டிபட்டி), வீரமுத்து (தேவாரம்) பாண்டியன் ( கம்பம்),  அசோக்குமார் (போடி), கழுவன், ஈஸ்வரன் (பெரியகுளம் வடகரை), சிங்கப்பன் (நாகலாபுரம்), முனுசாமி ( ஆண்டிபட்டி), கருப்பையா, பாண்டியன் (சிலைமலை) உள்ளிட்ட 13 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை அவர்களது பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்பிஎம் சையதுகான், ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, அதிமுக நகர செயலாளர் ராதா, அதிமுக துணை செயலாளர்  அப்துல் சமது, அதிமுக நகர்மன்ற குழுத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளா, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், அதிமுக மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நாராயணன், முருகானந்தம், வழக்கறிஞர் தவமணி, VTS. ராஜவேல், கவுன்சிலர்கள் குருசாமி, சந்திரா, ராணி, கீழ வடகரை ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகரன்,அன்பு, ராஜேந்திரன், ரெங்கராஜ், முத்துப்பாண்டி, சேகர், ஆஷிக், சரவணன், கதிரேசன், ராஜீ, பழனிச்சாமி, செல்வராஜ்  எ.புதுக்கோட்டை ரஞ்சித், நந்தகுமார், ராம்ஜி, முகிலன் உட்பட மாவட்ட நகர ஒன்றியக் அதிமுக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad