திமுகவில் இணைந்த அதிமுக நகர் மன்ற உறுப்பினர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 May 2022

திமுகவில் இணைந்த அதிமுக நகர் மன்ற உறுப்பினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் அதிமுக சார்பில் வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்ற D ரூபினி என்பவர் நகர் மன்ற உறுப்பினராக பதவியேற்று தற்போது பணியாற்றி வந்த  நிலையில்  அதிமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக கடந்த 30 ஆம் தேதி வந்திருந்த பொது அவர் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டார் இந்த தகவல் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் இன்று  நகராட்சிக்கு வருகை தந்த ரூபிணி நகர்மன்ற தலைவர் சுமிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் புனிதன் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது ரூபிணி கூறியதாவது :  மக்களுக்கு பணியாற்றுவதற்காக தான் இந்த முடிவு எடுத்ததாகவும் தான் வெற்றி பெற்ற பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுத் தருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது எந்தவித உள் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை தெரிவித்தார்.


 மேலும் ரூபினியின் இந்த முடிவால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது பெரியகுளம் பகுதியில் அதிமுகவிலிருந்து வெற்றி பெற்று அதிமுக நகர் மன்ற உறுப்பினராக பதவியேற்று அதிமுகவில்  இருந்து வரும் நிலையில் ஒருவர் அக்கட்சியை விட்டு விலகிச் சென்றது ஒரு நகர் மன்ற உறுப்பினரை அதிமுக இழந்ததோடு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் தமிழக முன்னாள் முதல்வர்  ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த ஊரான பெரியகுளம் நகராட்சியில் அதிமுகவை விட்டு விலகி திமுகவிற்கு நகர்மன்ற உறுப்பினர் ஒருவர்  செல்வது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது, பெரியகுளம் நகராட்சியின் அதிமுக சார்பில் 8 நகர் மன்ற உறுப்பினர்களும் இருந்த நிலையில் தற்போது ரூபிணி திமுகவிற்கு சென்றதால்  7 நகர்மன்ற உறுப்பினர்களை  கொண்டுள்ளது 


திமுக கூட்டணி ஏற்கனவே தலைவர் உட்பட 17 நகர்மன்ற உறுப்பினர்கள். கொண்டு இருந்த நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து ரூபினி விலகி சென்றதால் திமுக 17நகர் மன்ற உறுபினர்களையும் ஒருவர் நகர்மன்றத் தலைவரையும்  கொண்டுள்ளது,  அமமுக 3, பாமக 1, பார்வர்டு பிளாக் 1 உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்களை கொண்ட பெரியகுளம் நகராட்சி ஆகும் இதில் 1-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ரூபினி அதிமுகவை விட்டு விலகி திமுகவிற்கு இணைந்தது பெரியகுளம் மண்ணின் மைந்தர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad