தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 32ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை இந்திய கூடை பந்தாட்ட ஆண்கள் பிரிவு கேப்டன் முயூன்பேக் அவர்கள் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார்.
இதில் தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் முருகன், பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முதல்வர் ராஜாங்கம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கூடைப்பந்தாட்ட ஆண்கள் பிரிவு கேப்டன் முயூன்பேக் பரிசுகளை வழங்கினார்.
No comments:
Post a Comment