விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நேற்று 28ஆம் தேதி நடைபெற்றது .
திருவிழாவிற்கு விருதுநகர் மாவட்டம் தானிப்பாறை மற்றும் சாப்டூர் மலை ப்பாதையிலும் தேனி மாவட்டத்திலிருந்து உப்புத்துறை மலை பாதையிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்றிருந்தனர் . விழாவை முடித்துவிட்டு திரும்ப தேனி மாவட்டத்திலிருந்து சென்றவர்கள் உப்புத்துறை மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தனர் .
அப்போது சதுரகிரி மற்றும் உப்புத்துறை இடையே மலையில் உள்ள யானைகெஜம் அருவியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . அப்போது அருவிப்பகுதியில் கடக்க முயன்ற ருக்கும் மேற்பட்ட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு துறையினர் அவர்களை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.
No comments:
Post a Comment