தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் கலந்து கொண்டுபோதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜேசுராணி-தாமரைக் குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன்,செயல் அலுவலர் ஆளவந்தான், பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வசந்தா மூக்கையா, கவிதா டென்சன், ஜாகீர் உசேன், தேவகி தென்னரசு, திமுக பேரூர் செயலாளர் கர்த்தராசு, துணைச் செயலாளர் போர்வாள் அப்பாஸ் மைதீன், அன்பில் ரமேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் பணியாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் போதை ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment