பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில் பெண்களை ஒன்றிணைத்து சிறுதானிய பொங்கள் திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 10 January 2023

பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில் பெண்களை ஒன்றிணைத்து சிறுதானிய பொங்கள் திருவிழா நடைபெற்றது.


தேனி மாவட்டம், பெரியகுளத்தில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில், சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023ஐ முன்னிட்டு அன்று பெரியகுளம், வடகரை,  கல்லார் ரோடு பகுதியில் சிறுதானிய பொங்கல் வைக்கும்  விழா நடைபெற்றது.


இதில் அந்தப் பகுதியில் உள்ள மகளிர்களை ஒன்றிணைத்து சிறுதானிய பொங்கல் இட்டு பொதுமக்களுக்கு வழங்கி சிறுதானியத்தின் மகத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைத்தனர்.


மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தேனி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களின் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு எழுவின் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் இயங்கி வருகிறது, இதில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு, தமிழகத்தில் 28 வருடங்களாக 21 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியோர், ஆண்கள் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து சமூக கலாச்சார, பொருளாதார, அரசியல், பாலியல், சுற்றுச்சூழல் மற்றும் உணவு உத்தரவாத ரீதியாக பலப்படுத்தும் பணியை செய்து வருகிறது. 


பெண்கள் இணைப்பு குழுவின் ஒரு அங்கமாக களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய சிறுதானியகள் பயிர் செய்வதை ஊக்கப்படுத்தி வருகிறது. பாரம்பரிய சத்தான சிறு தானியங்களை மீட்டெடுக்க இந்திய சிறுதானிய கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய சிறுதானிய சகோதரிகள் அமைப்போடு பெண்கள் இணைப்பு குழுவும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.


கடந்த 10 ஆண்டுகளாக சத்தான சிறுதானியங்கள் உற்பத்தி செய்யவும் அன்றாட உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ளவும், அரசின் நியாய விலை கடைகளிலும், அனைத்து உணவு வழங்கும் திட்டங்களில் சிறுதானியங்களை வழங்க வேண்டும் என்றும், பஞ்சாயத்துக்குட்பட்ட தரிசு நிலங்களை சிறுதானிய உற்பத்தி செய்யும் பெண் விவசாயிகள் மற்றும் கூட்டு விவசாய குழுக்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க வேண்டியும் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றோம் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் பொருட்டு சிறுதானிய விதை திருவிழாக்கள், சத்தான உணவு உத்தரவாதத்திற்கான உணவு திருவிழாக்கள் போன்ற பிரச்சார வழிகளை பயன்படுத்தி கிராமங்களிலும், பள்ளி கல்லூரிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 2023 ஜனவரி பத்தாம் தேதி சர்வதேச சிறுதானிய ஆண்டு 20203 ஐ முன்னிட்டு இன்று ஓராண்டு பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுத்து உள்ளோம் அதன் அடிப்படையில் பெண்கள் இணைப்பு குழு தமிழகத்தில் 21 மாவட்டங்களில் "சிறுதானிய பொங்கல்" வைத்து சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வருகின்றோம் அதன் ஒரு பகுதியாக இன்று பெரியகுளத்தில் சிறுதானிய பொங்கலிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.


மேலும் இயற்கை முறையில் இரும்பு, மஞ்சள் கிழங்கு, விறகு அடுப்பு வைத்து மண்பானையில் தமிழர்களின் பாரம்பரிய கலரசாரத்தை எடுத்துரைக்கு வண்ணம் இயற்கையான முறையில் சிறுதானியங்களில் பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்கியது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad