ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றினால் தென்னை மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 10 April 2022

ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றினால் தென்னை மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது .இதே போல் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மாச்சியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள  பகுதியில் சூறாவளி காற்று திடீரென வீசத்தொடங்கியது.


அம்மாச்சியாபுரம்  மரிக்குண்டு சாலையில் அலகு நகர் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தென்னை மரங்கள் திடீரென சூறாவளி காற்றினால் சாய்ந்தது .மேலும் அருகில் இருந்த மின்சார வயரின் மீது இரண்டு தென்னை மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பம் ஒன்று வேரோடு சாய்ந்தது மற்றொன்று சாய்ந்த நிலையில் இருந்தன. இந்த தகவல் அறிந்த ஊராட்சிமன்ற தலைவர் பஞ்சமணி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரத் துறையினருக்கு தகவல் கூறினார்.


மின்சார துறையினர் மற்றும் ஊர் கிராமத்தினர் துணையுடனும்  ஜேசிபி உதவியுடன் தென்னை மரங்களை அப்புறப்படுத்தினார் மேலும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் கம்பம் அருகில் இருக்கும் லட்சுமி என்பவரின் வீட்டு பகுதியில் பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது மாட்டின் உரிமையாளர் உடனடியாக பசு மாடுகளை அவிழ்த்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 


மேலும் ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு அப்புறப்படுத்தினார் இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது 

No comments:

Post a Comment

Post Top Ad