அதிமுக உட்கட்சி தேர்தலில் உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் கைகலப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 11 April 2022

அதிமுக உட்கட்சி தேர்தலில் உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் கைகலப்பு.

தேனி உழவர் சந்தை சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தேனி நகரம், ஒன்றியம் மற்றும் வீரபாண்டி, பழனி செட்டி பட்டி ஆகிய பேரூர் கழக நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக தேர்தல் பொறுப்பாளர்களாக அதிமுக கழக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதில் வீரபாண்டி பேரூர் கழக 2 வது வார்டு செயலாளர் வேங்கையன் இவர் நடைபெறறு  உள்ளாட்சி தேர்தலில் வீரபாண்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு  போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் அதற்கு கட்சி மாவட்ட நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என கூறியதை தொடர்ந்து   தமிழன் என்பவர் வீரபாண்டி 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தமிழன் தோல்விக்கு வேங்கையன் மறைமுகமாக வேலை செய்ததாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக தமிழன் வேங்கயைன்  ஆகியோருக்கு இடையே உட்கட்சி பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று இருவரும் வீரபாண்டி பேரூர் கழக நிர்வாகிகள் தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக வந்த இடத்தில்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் செலுத்தும் இடத்தில் அவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிப் போய் கைகலப்பாக மாறியது, இதையடுத்து அங்கிருந்த அதிமுகவினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad