க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தார் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 30 April 2022

க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தார் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு.

முதல்வர் ஸ்டாலின் இன்று தேனிக்கு வந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் பாதுகாப்பு பணிக்காக டி.ஜி.பி.,சைலேந்திரபாபு இரண்டு நாட்களாக தேனியில் தங்கியுள்ளார். அவர் மாவட்டம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.


தேனி அருகே உள்ள க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தார். ஸ்டேஷன் மிகவும் சுத்தமாக இருந்தது. ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டிருந்தன. கைதிகள் தங்க வைக்கப்படும் அறை மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு ஆச்சர்யம் அடைந்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு, ஸ்டேஷன் எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசாரை அழைத்து 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்தார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad