திமுக ஒன்றிய கூட்டத்தில் சலசலப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 April 2022

திமுக ஒன்றிய கூட்டத்தில் சலசலப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய திமுக உட்கட்சித் தேர்தல் நேர்காணல் பெரியகுளம் வடுகபட்டி சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடுகப்பட்டி, தேவதானப்பட்டி, தென்கரை, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய 5 பேரூராட்சிகளுக்காண வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கான, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் இன்று நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 


நேர்காணலில் தேர்தல் ஆணையாளர் ரவிச்சந்திரன் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், வடக்குஒன்றியதிமுக பொறுப்பாளர் எல்.எம் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திமுக நிர்வாகிகள் கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர் இதனால் ஆத்திரமடைந்த வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் சத்தம் போடுவதாக இருந்தால் வெளியில் போய் சத்தம் போடுங்கள் இங்கே கூச்சல் குழப்பம் பண்ண வேண்டாம் என்று கூறியுள்ளார்.


இதனால் ஆவேசப்பட்ட திமுக உடன்பிறப்புகள் சேர்களை தூக்கி வீசி கூட்டத்தில்வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குவாதங்கள் அடிதடி வரை செல்லும் நிலை ஏற்பட்டது சுதாரித்துக் கொண்ட திமுக நிர்வாகிகள் உடனடியாக அரங்கை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad