தேனி மாவட்டம் தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் ஒன்றிணைந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அழகர்சாமிபுரம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தொழுகை மைதானமான ஈதுகா மைதானத்தில் இன்று ரமலான் பண்டிகையின் ஈதல் சிறப்பு தொழுகையில் 5000த்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் பங்கேற்றனர்.
மேலும் ரமலான் மாதத்தில் நோன்பு இறுந்தவர்கள், பெரியவர்கள் முதல் சிருவர்கள் என அனைவரும் புத்தாடை உடுத்தி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு தொழுகை முடிந்த பின் அனைவரும் . ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment