வீரபாண்டி திருவிழா நடைபெற உள்ளதையொட்டி வீரபாண்டி காவல் நிலையத்தில் தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பால் சுதர் தலைமையில் வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பழனிசெட்டிபட்டி மற்றும் வீரபாண்டி காவல் ஆய்வாளர் முருகன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி வீரபாண்டி காவல் உதவி ஆய்வாளர்கள் வரதராஜன் லதா ஆகியோர் முன்னிலையில் வீரபாண்டியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட சிறிய கூட்ட அரங்கம் மற்றும் தனியார் திருமண மண்டபம் உரிமையாளர்கள் திருவிழா காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment