தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 2 May 2022

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி மாவட்ட செயலாளர் மல்லர் பாலா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில்  தேவேந்திரகுல வேளாளர் நீண்ட கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையும், பெண்கள் பாலியல் வன்கொடுமையை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்டக் கோரி பள்ளி மாணவ மாணவியர்களை சீரழிக்கும் கஞ்சாவை இரும்புக்கரம் கொண்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்க குடும்பனார் வெண்கல திருவுருவச் சிலையை தேனி மாவட்டத்தில் அமைக்க கோரியும் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி  பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் அழகு ராணி மற்றும் வழக்கறிஞர் குமார் இணைச்செயலாளர் கம்பம் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட நகர ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad