தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்குத்தெரு வீரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ப. ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தை அதிமுக நகர் மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் துவக்கிவைத்தார். கோவில் நிர்வாகிகள் சின்னத்துரை,வீர கேசவன்,குருசாமி, ரவிராஜ்,முத்துவீரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு அன்னதானத்தை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாவிளக்கு முளைப்பாரி அக்கினிச்சட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment