தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து இடையூறை சரி செய்ய வேண்டிய போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வாகனம் போக்குவரத்து இடையூறுக்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது மேலும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதனை உணர்த்தும் விதமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊருக்கு ஒரு நியாயம் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு ஒரு நியாயமா ? பொதுமக்கள் குமுறல்.
No comments:
Post a Comment