முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறப்பு . - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 31 May 2022

முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறப்பு .

முல்லை பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறப்பு - 14,707 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட விவசாயிகளின் முதல் போக பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடிநாயக்கனூர் வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது.


முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். 


கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல்போகத்திற்கு ஜூன்மாதம் திறக்கவேண்டிய தண்ணீர் தாமதமாகவே திறக்கப்பட்டது. 


கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மதங்களில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 130.90 அடிவரை உயர்ந்ததால் ஜூன் மாதம் முதல் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 


இந்த ஆண்டும் அணையின் நீர்மட்டம் தற்போது 130 அடிக்கு  குறையாமல் இருந்ததால், ஜூன் முதல் தேதியில் பெரியாறு அணையிலிருந்து முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட  முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


இதுகுறித்து வெளியிடப்படுள்ள அரசாணையில்:

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் மொத்தம் வினாடிக்கு 300 கன அடி வீதம் 01.06.2022 முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனை அடுத்து நாளை காலை 10.30 மணிக்கு தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில்  தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad