அதனை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில், செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பேரணியாக, ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, எம்ஜிஆர் சிலை வரை வந்து, அதனை தொடர்ந்து கடைவீதி, நாடார் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .அப்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்தவாறு, விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு ஒன்பது மாதம் நடைபெற்ற 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை ஊசியும் போட்டுக் கொள்ளுமாறு கூறினார். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment