கும்பக்கரை அருவியில் கழன்று தண்ணீருக்குள் விழுந்த 6 பவுன் செயின்; கண்டுபிடித்துக் கொடுத்த வனச்சரகர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 4 June 2022

கும்பக்கரை அருவியில் கழன்று தண்ணீருக்குள் விழுந்த 6 பவுன் செயின்; கண்டுபிடித்துக் கொடுத்த வனச்சரகர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது கும்பக்கரை அருவி, இந்த அருவியில் தற்போது தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் வெளிமாவட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


இந்நிலையில் இன்று கும்பக்கரை அருவிக்கு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முருகேசன் என்பவர்தனது குடும்பத்தினருடன் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா வந்துள்ளனர், முருகேசன் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போதுஅவர் அணிந்திருந்த ரூபாய் 2,00000 (இரண்டு லட்சம்) மதிப்புள்ள 6 பவுன் செயின் கழன்று தண்ணீருக்குள் விழுந்து விட்டது.


இது சம்பந்தமாக வனச்சரகர் டேவிட்ராஜ் அவருக்கு மேற்படி நபர் தகவல் அளிக்கவே அவர் தனது படையினருடன் வந்து கும்பக்கரை அருவியில் தேடுதல் பணியில் ஈடுபட்டார். தேடுதலின் முடிவில் தொலைந்துபோன தங்க சங்கிலியை கண்டறிந்து முருகேசன் அவர்களிடம் ஒப்படைத்தார்.


தனது தங்க சங்கிலியை கண்டுபிடித்துக் கொடுத்த வனச்சரகர் டேவிட்ராஜ் மற்றும் வனத் துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad