தாமரைக்குளம் பேரூராட்சியில் எனது நகரம் எனது தூய்மை என்ற தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 June 2022

தாமரைக்குளம் பேரூராட்சியில் எனது நகரம் எனது தூய்மை என்ற தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தாமரைக்குளம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் எனது நகரம் எனது தூய்மை என்ற தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆளவந்தான் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்  கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

கழகத்தின் போர்வாள் இளைஞரணி அப்பாஸ் மைதீன்,ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், நியமனக் குழு தலைவர் பாலாமணி பழனிமுருகன், வசந்தா மூக்கையா, ஜாகிர் உசேன், கவிதா இருதயநாத டென்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad