தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் வடுகபட்டி பேருராட்சியில் மக்கள் நீதிமய்யம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெத்தனசாமி, வடுகபட்டி பேருர் செயலாளர் செந்தில்ராஜ் ஆகியோர் மாவட்ட திமுகழக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகழகத்தில் இணைத்து கொண்டனர்.
நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேருர் செயலாளர் விஸ்வா, பேரூராட்சி் மன்ற தலைவர் நடேசன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.திமுகவில் இணைந்த அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
No comments:
Post a Comment