தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நிர்வாகிகள் ஆண்டவர், நிஜாம், மணிபாரதி, செல்வராஜ், ரெட்டைமலை ரமேஷ், சக்திவேல், வெற்றிவேல், பெரியசாமி, ஆட்டோ செந்தில், பொற்கைபாண்டி, மொசைக்முருகன், முருகபூபதி, தங்கபாண்டி, முருகன், அமர்நாத், உள்ளிட்டர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment