யாருக்கும் அடங்காத குடிமகன்கள் சிலபேர் பகல் நேரத்திலேயே பார்சல் மற்றும் தின்பண்டங்களை வாங்கி வந்து எத்தனை பேர் இருந்தாலும் முகம் சுளிக்கும் வகையில் மது அருந்துகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது.ஆங்காங்கே நிரோத் பாக்கெட்டுகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் உள்ளன. மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பள்ளி மைதானத்தை சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவகின்றனர்.
ஆகவேநியூ கிரவுண்டை நவீனப்படுத்தி சிசிடிவி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தி ஒரு முழுமையான விளையாட்டு மைதானமாக மாற்ற அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் தினமும் காலை மாலை இரண்டு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment