தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சீர் மரபினர் நல சங்கம் பிரமலைக்கள்ளர் சமுதாயத்தினர் சார்பில், கள்ளர் சீரமைப்பு துறையை பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு மாற்றியதை கண்டித்து 40GO வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் லட்சுமி, தேனி மாவட்ட செயலாளர் மாயாண்டி , சீர் மரபினர் நல சங்க தென்மண்டல தலைவர் ராமமூர்த்தி, சீர்மரபினர் நலச்சங்க மாவட்ட பொருளாளர் பாண்டீஸ்வரன், மாநில இளைஞரணி செயலாளர் கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment