தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி சின்னராஜ் பூங்காவை கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா(பார்க்) பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார், நகரமன்ற தலைவர் சுமிதாசிவக்குமார், நகராட்சி ஆணையாளர் புனிதன்,நகராட்சி பொறியாளர் சண்முக வடிவு ஆகியோர் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், பவானிமுருகன், சுதா நாகலிங்கம், ஆபிதாபேகம், கிஷோர்பானு, லட்சுமி கார்த்திகேயன், அப்துல்மஜீத், அகமது அலி, வெங்கிடுசாமி, வைகை சரவணன், மதன்குமார், குமரன், பால்பாண்டி, வெங்கடேஷ், திமுக நிர்வாகிகள் இலியாஸ், முத்துப்பாண்டி, அப்பாஸ்கான், ரபீக், பாலு, சுப்பையா,லதா சேதுராமன்உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment