தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிளை நூலகத்தில் மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுடைய நினைவு நாள் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது, அப்துல் கலாம் உருவ படம் வைத்து மாலை மரியாதை செய்யப்பட்டது.
நூலக ஆர்வலர் அன்புக்கரசன், ரோட்டரி கிளப் தலைவர் வழக்கறிஞர் மணி கார்த்திக், மாங்கனி அரிமா சங்கத் தலைவர் பொறியாளர் ராமநாதன், ராயல் சங்க தலைவர் சுரபி பாண்டியராஜன், K.ஆனந்தன், வாசகர்கள், புரவலர்கள் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அனைவருக்கும் நல்நூலகர் ஆ. சவடமுத்து நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment