கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 August 2022

கொலை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தமபாளையம் தாலுகா சுருளிப்பட்டியில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையா தேவர் மகன் காராமணி வயது 58/17 என்பவர்  அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை 65/17 வயது என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று இறுதி விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காராமணி என்பவருக்கு குற்றவாளி என தீர்மானித்து 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் மூன்று மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad