வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 August 2022

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியதால், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ளை அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தற்போது அணைக்கு 2634 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது, நீர்மட்டத்தை 70 அடி வரை உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்திருப்பதால், இன்று மாலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்த பின்னர் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு. 

No comments:

Post a Comment

Post Top Ad