தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கக்கன்ஜி நகர் பகுதியில் பொதுமக்கள் வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக மூன்று நாட்கள் கொண்டாடி வரும் நிலையில் தேவதானப்பட்டி கக்கன்ஜி நகர் பகுதியில் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பொதுபாதை இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பல்வேறு முறை அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினரிடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இல்லங்கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment