முத்தாலம்பாறையில் மாபெரும் கபடி போட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 20 August 2022

முத்தாலம்பாறையில் மாபெரும் கபடி போட்டி.

கடமலைக்குண்டு  அருகே முத்தாலம் பாறை கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா தலைமை  வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், கம்பம் , கோட்டூர், விருதுநகர், முத்தாலம்பாறை, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, வண்ணாத்திப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி வீரர்கள்  கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல், இரண்டாம்  மூன்றாம்  மற்றும் நான்காம் பரிசுகள் வழங்கப்பட்டது. 



சிறப்பு அழைப்பாளர்களாக கடமலை மயிலை  ஒன்றிய திமுக செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, ஒன்றிய நிர்வாகிகள் ,ஸ்டிபன் ,பிரபு, அறிவழகன், காந்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்தாலம்பாறை கிங் வாரியர்ஸ் கபடி குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad