தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கைலாசநாதர் மலைகோயிலில் 9/8/2022 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர், வருகை தந்த பக்தர்களுக்கு பெரியகுளம் திருசெளந்தரபாண்டியன் அவர்கள் பிரசாதம் வழங்கினார்.
இந்த சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் ஆலோசனையின் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர். 11/8/2022 வியாழக்கிழமை பெளர்ணமி கிரிவலமும் அன்னதானமும் நடைபெறும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment