தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் DPI தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியா இயக்கத்தின் முன்னாள் மாநில அமைப்பாளர் மலைச்சாமி அவர்களின் 33ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று பெரியகுளம் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி, நகரச் செயலாளர் ஜோதி முருகன், நகர்மன்ற உறுப்பினர் பிரேம்குமார், தொழிலாளர், மாநிலதுணைச் செயலாளர் தமிழன், கோமதிஆனந்தராஜ், இளமதி, மாவட்ட அமைப்பாளர்கள் மது, நிஜாம், நிர்வாகிகள் சையது இப்ராகீம், சந்தனம், செல்வராஜ், இனியன், வெற்றிவேல், தமிழ்செல்வன், கோமதிராதா கிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment