தேனியில் நாம் தமிழர் கட்சியினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 30 September 2022

தேனியில் நாம் தமிழர் கட்சியினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனியில், தேனி - மதுரை நெடுஞ்சாலையில், பங்களா மேடுத் திடலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி - கம்பம் நெடுஞ்சாலையில், உப்பார்பட்டி விலக்கில், புதிதாக சுங்கச்சாவடி(டோல்கேட் ) திறப்பதை  தடுத்து நிறுத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சியின், தேனி பெரியகுளம் தொகுதி செயலாளர் அ.கா.பிரபாகரன் தலைமையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்,தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரேம்சந்தர், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் அ.செயக்குமார், பெரியகுளம் தொகுதி செயலாளர் கா.பிரபாகரன், போடி தொகுதி செயலாளர் ஞான.சரவணன், கம்பம் தொகுதி செயலாளர் மு.ராஜேஸ்கண்ணன், ஆண்டிபட்டி தொகுதி செயலாளர் சு.மாரிமுத்து உள்ளிட்ட, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில், இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள்  பலர் கலந்து கொண்டு, தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் உப்பார் பட்டி விலக்கில், புதிதாக சுங்கச்சாவடி திறப்பதை தடைசெய்யக்கோரி,கண்டன முழக்கங்களையும், கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.

No comments:

Post a Comment

Post Top Ad