தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் மற்றும் இபிஎஸ் ஆதரவாளரான தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தை சந்தித்த திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஓபிஎஸ் வாழ்க ஓபிஎஸ் வாழ்க வருங்கால முதல்வர் வாழ்க என கோஷங்கள் எழுப்பி அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூ கொத்துகள் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் ஓபிஎஸ்சை சந்திக்க வந்த திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்ததால் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பேணப்பட்டு, மிக அற்புதமாக நடந்து கொண்ட அதிமுக ஆட்சியில் இரண்டு முறை முதல்வராக ஜெயலலிதா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டவர் ஓபிஎஸ். இன்றைய நிகழ்வில் திருப்பூர் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலமே எடப்பாடி கையில் உள்ளது போல் மாயையை உருவாக்கியுள்ளார். அதுபோன்று எந்த மாயையும் இல்லை என்பதற்கு இந்த நிகழ்வே அத்தாட்சி என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment