பெரியகுளம் சாலையில் திரிந்த மாடுகள் பிடிபட்டன. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 17 November 2022

பெரியகுளம் சாலையில் திரிந்த மாடுகள் பிடிபட்டன.


தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை மற்றும் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு இடையூறாகவும் மாடுகள் சுற்றித்திரிந்தன. மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதனை அடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, துணை கண்காணிப்பாளர் கீதா,  நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் அசன் அகமது, சேகர் ஆகியோர் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இன்று காலை சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடுகள் மற்று 5 கன்று குட்டிகள் என 9 மாடுகளை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 


இந்த தகவலை அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் கூடி, மாடுகளை பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த எதிர்ப்பையும் மீறி ,  பிடிபட்ட 9 மாடுகள் காவல்துறையினரின் உதவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள கோசாலைக்கு அனுப்பப்பட்டது. நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய காவல் துறையினருக்கும் நகராட்சி நிர்வாகத்தினருக்கும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad