இதனால் வாழ்வாதாரம் இழந்து வீடுன்றி நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தங்கி வரும் இளையராஜா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட இளையராஜா குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்க தலைவர் ராமநாதன் தலைமையில், செயலாளர் ரமணி குமார், பொருளாளர் நித்தியானந்தம், நிர்வாகிகள் முத்து இருளப்பன், ஜெகன், பாண்டியன், பக்ரி முகமது, செல்வகுமார் ஆகியோர் இளையராஜா குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் காய்கறிகள் அரிசி, வேட்டி, சேலை இளையராஜாவின் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் போன்றவற்றை வழங்கினார்கள்.
மேலும் பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் இளையராஜா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இளையராஜாவின் குடும்பம் வீடுன்றி சாலையின் ஓரம் சமைத்து வாழ்ந்து வருவது அப்பகுதி பொதுமக்களிடையே மனவேதனையை உள்ளாக்குகிறது.
No comments:
Post a Comment