சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: தோட்டத்தில் தற்காலிக ஆட்டு மந்தை வைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 December 2022

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: தோட்டத்தில் தற்காலிக ஆட்டு மந்தை வைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தார்.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் சொர்க்கம் மலைப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் தோட்டத்தில் தற்காலிக ஆட்டு மந்தை  வைத்திருந்த உரிமையாளர் அலெக்ஸ்பாண்டியன் சிறையிலிருந்து ஜாமினில்  வெளிவந்தார் மாலை மற்றும் சால்வே அணிவித்து பட்டாசுகள் வெடித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்கம் சார்பில் அமோக வரவேற்பு அளித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக அதை பார்த்த விவசாயி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.


இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின்வேலியில் சிக்கியிருந்த இரண்டு வயது சிறுத்தையை காப்பாற்ற முயன்ற போது அது தானாகவே மின்வேலியில் இருந்து தப்பி ஓடியதாகவும், தப்பி செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பி சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர், சிறுத்தை தாக்கியதில் மகேந்திரனின் இடது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.


இதனைத் தொடர்ந்து தப்பி சென்ற சிறுத்தை அதற்கு மறுநாளே தப்பிய இடத்தில் உள்ள அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அங்கிருந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.


இன் நிலையில் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையை மீட்டெடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தையை எரித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


மின்வேலியில் சிக்கி தப்பிய சிறுத்தை மறுநாளில் அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்க சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது, சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இடம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான இடம் வனவிலங்குகள் வருவதை தடுக்க தனது இடத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைத்து இருந்தார். அந்த சோலர் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது.


இந்நிலையில் சிறுத்தை உயிர் இழந்த சம்பவத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து வனத்துறையினர் கைது செய்தன். மேலும் தோட்டத்தின் உரிமையாளரான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்யாமல் அதில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர்  வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அடித்து உதைத்து சித்திரவதை செய்வதாக இது மனித உரிமை மீறல் என்றும் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் தேனி திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வனத்துறை அதிகாரியை பார்த்து தோட்டத்து உரிமையாளர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது இருந்தார்.


மேலும் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது, இந்நிலையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்  அவரது மேலாளர் ராஜவேல் தங்கவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தொடர்ந்து தோட்டத்து உரிமையாளர் ரவீந்திரநாத் க்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி வலியுறுத்தி இருந்த நிலையில் ரவீந்திரநாத் விசாரணைக்கு ஆஜரானார் இதனைத் தொடர்ந்து ரவீந்திரநாத் அவருடைய மேலாளர் கிருஷ்ணனும் தேனி வனத்துறையினர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் தற்போது சிறையில் இருந்த ஆடு கிடை உரிமையாளர் அலெக்ஸ் பாண்டியன் சிறையில் இருந்து இன்று ஜாமீனில் வெளிவந்துள்ளார்.


இந்நிலையில் தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லலிதா ராணி ஜாமீன் அளித்ததை தொடர்ந்து சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த அலெக்ஸ் பாண்டியனை அழைத்துச் செல்வதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தைச் சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் கிளைச்சிறை முன்பு    சிறையிலிருந்து 60 நாட்களுக்குப் பிறகு ஜாமினில் வெளிவந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  பட்டாசு வெடித்து  அழைத்துச் சென்று அதற்கு பின்பாக வனத்துறையினர் மீது பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் உடன் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க வழக்கறிஞர் சத்தியம் சரவணன் உடன் இருந்தார்


இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரை சந்தித்த அலெக்ஸ் பாண்டியன் குறுகையில் ஆடு வளர்ப்பது எனது தொழிலாகக் கொண்டுள்ளேன் ஆனால் வனத்துறை அதிகாரிகள் என்னை மிரட்டி சேர்த்து இறப்பில் என்னை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்கள் எனவே தற்போது உதவி வனக்காப்பாளர் மகேந்திரன் வனச்சரகர் செந்தில்குமார் வனக்காவலர் அருண் பிரபு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்


இதனைத் தொடர்ந்து கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் கூறுகையில் ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தும் ஏழை தொழிலாளி  ஒருவரை வன உதவி காவலர் மகேந்திரன் வனச்சரகர் செந்தில்குமார் வனக்காப்பாளர் ஆனந்த பிரபு ஆகியோர் திட்டமிட்டு அலெக்ஸ் பாண்டியனை அடித்து துன்புறுத்தி சம்மதிக்க வைத்து வழக்கு பதிவு செய்து உள்ளனர் எனவே அவர்கள் மீது தற்போது அலெக்ஸ் பாண்டியன் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக இதனை தொடர்ந்து மனித உரிமை ஆணையத்தில் முறையீடு செய்ய உள்ளோம் தமிழக முதல்வர் இந்த வழக்கை சிபிசிஐடி மாற்ற வேண்டும்  உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இந்த சிறுத்தை உயிரிழப்பு விவகாரத்தில் முதல்வரை சந்திப்பதற்காக கோட்டைக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார் அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்டுள்ள வடக்கு சம்பந்தமான வழக்குகளை முடிப்பதற்கு இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad