![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_fRml_6Do6JRJMUOReVqBrp3qHO7mDGk__oKjrrvFXgCjP04BTd-huin4gC2opLLZcLqdYqh0OoS9fhE_dn13WQCzR1YMsspOeDIKpK_c6u950IQts3cXHrbrZkkeYZvKCritj0Rl8J28w1Lstt24mzteyHeGeCmBC9gKER6HtuZFfonE9rfzjD7G/s16000/tamilaga%20kural.gif)
இந்த கண்டன,ஆர்ப்பாட்டத்தில், பெரியகுளம் இளம் புலிகள் அணி செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் தமிழரசு, சின்னமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை அமைப்பு செயலாளர் தேனி தமிழரசி கலந்து கொண்டார். முன்னாள் மாநில நிர்வாகிகள் தலித் ராயன், மகிழவேந்தன், அலெக்சாண்டர், தனியரசு, சுப வீரபாண்டியன், இளந்தமிழன், டி. வாடிப்பட்டி கிளைச் செயலாளர் காளிமுத்து, ஆகியோர் கலந்து கொண்டு டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜயமாலா ஆகியோரை கண்டித்து, கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்பு பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவி திட்ட அலுவலர் மருதப்பன் அவர்களிடம் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் அங்கிருந்து கலந்து சென்றனர். முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgarl-mR1iJhwXZhAE8WAqW7qmc7qXWBVVHKNSc03GGWguybWQbfdZ5IEi9gpCcJoK1P3wkwhRUxyyljpo7XeupfMCZpwyocFFVzMYRAHU0qchhHdvM7u_ZM9XTs8d3oXV9VntKafKN8dS_tWhbnT-hNCGMRZ-sZzB_EQJ8gsyHCuWeFgxJF1bd2Cy7/s16000/share%20it%20-%20tamilagakural.gif)
No comments:
Post a Comment