வடுகப்பட்டியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 18 January 2023

வடுகப்பட்டியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியகுளம் அருகேவுள்ள  வடுகபட்டி பகுதியில் பட்டியலின மக்கள் மாட்டுப்பொங்கல் திருநாளில் மாட்டினை  பொது பாதையில் கொண்டு செல்ல கூடாது என கூறி பட்டியலின மக்கள் மீது ஒரு சமூகத்தினர் பட்டியல் இன மக்கள் மீது  கொடூர தாக்குதலும் பட்டியல் இன சிறுவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை முயற்சி செய்துள்ளதாக கூறியும் இத்தகைய செயலுக்கு நீதி கேட்டுப் போராடிய பட்டியலின  மக்களை பெரியகுளம் காவல்துறையினர் கைது  செய்து பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் வடுகப்பட்டி பகுதியில் பட்டியலினை மக்களை தாக்கிய சமூகத்தினரையும், காவல்துறையினரை கண்டித்தும் தமிழ் புலிகள் கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ் புலிகள் கட்சி தேனி மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் பாலா என்ற தமிழரசு தலைமையில் நடைபெற்றது .இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் புலிகள் கட்சி மாநில அமைப்பு துணைச் செயலாளர் தேனி தமிழரசி, முன்னாள் மாநில நிர்வாகி தலித்ராயன் கலந்து கொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். பெரியகுளம் ஒன்றிய இளம்புலிகள் அணி செயலாளர் மணிகண்டன், தேனி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்  மாரி பிரபா தமிழ் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.  


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி தேனி கிழக்கு மாவட்ட நிதி செயலாளர் மதுரை வீரன், தேனி மாவட்ட இளம்புலிகள் அணி துணைச் செயலாளர் ராமர் வேல், பெரியகுளம் இளம்புலிகள் ராஜ், ரஜினி முத்து ,மணிகண்டன், தமிழரசன், தமிழ், செல்வா, உதயா ஆகிய நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad