கைலாசநாதர் மலைக்கோயிலில் 18 - 2 - 2023 மகா சனி பிரதோஷம் 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 20 February 2023

கைலாசநாதர் மலைக்கோயிலில் 18 - 2 - 2023 மகா சனி பிரதோஷம் 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 18 - 2 - 2023 மகா சனி பிரதோஷம் 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது வருகை புரிந்த பக்தர்களுக்கு கட்டளைதாரர்கள் சார்பாக பிரசாதம் வழங்கபட்டது, அதை தொடர்ந்து 21ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழா இரவு10 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை நான்குகால பூஜை நடைபெற்றது.


தேனி மாவட்டம் மற்றும் பல மாவட்டத்தில் இருந்துபக்தியுடன் நான்குகாலமும் இருந்து பூஜையில் கலந்துகொண்டு  மகாசிவராத்திரி நான்குகால பூஜை அதாவது முதல் கால பூஜை இரவு 10.00 மணிக்கும் இரண்டாம் கால பூஜை 12.00 மணிக்கும் மூன்றாம் கால பூஜை 2.00 மணிக்கும் நான்காம் கால பூஜை 4(நான்கு மணிக்கு பிரம்ம முகூர்த்த தொடங்கிபூஜை 5.30 வரை நடைபெற்றது வருகை புரிந்த பக்தர்களுக்கு கட்டளைதாரர்கள் திரு M. வீரயராஜ் ரியல் எஸ்டேட் திரு M தண்டபானி தாமரைகுளம் முன்னால் சேர்மன்சார்பாக அன்னதானமும், நான்குகாலமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. 

இரவு முழுவதும் கூட்டு வழி பாடும், பஜனைகள், தேவாரம் திருவாசகம் பாடுதல், ஆன்மீக சொற்பொழிவு, நடைபெற்றது மற்றும் பக்தர்களுக்கு கைலாசநாதர்பூஜையில் வைத்த ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது சிற்பான ஏற்பாடுகளையும் வசதிகளையும்  பக்தர்களுக்கு   அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் விப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யபட்டத.

No comments:

Post a Comment

Post Top Ad