பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் விவகாரம்; நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 February 2023

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் விவகாரம்; நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல்.


தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரில் பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு 180 மாணவ மாணவிகளும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். நெசவாளர்கள் நிறைந்த மிகவும் பின்தங்கிய பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தை பெற்று  கல்விதரத்தில்  முன்வந்து  சாதிக்கவில்லை. இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் கழிப்பறைகளை தாங்களே சுத்தம் செய்யும் காணொளி நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இக்காட்சியை கண்ட இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின்  பெற்றோர்களும் இப்பகுதி பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

இந்நிலையில் இத்தகவல் அறிந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் நேற்று  நேரடியாக ஆண்டிபட்டி வந்து பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை  பணிநீக்கம்  செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தலைமை ஆசிரியரை கண்டித்து அவர்கள் கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர் . 


இதைடுத்து  கல்வி அதிகாரிகள் விசாரணை  நடைபெற்று வருவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து சென்றனர். பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்த சம்பவமும்,  அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை அலுவலர் ஆய்வும்,  அரசியல் கட்சியினர் போராட்டம்  மேற்கொண்டதும் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad