மாமியாரிடம் மோசடி செய்த மருமகன்; கலெக்டரிடம் மனு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 14 February 2023

மாமியாரிடம் மோசடி செய்த மருமகன்; கலெக்டரிடம் மனு.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T.கள்ளிப்பட்டி வெங்கடாசலம் புரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சாத்தாவுமனைவி அய்யம்மாள் இவருக்கு, மங்கையர்க்கரசி என்ற மகளும் மணிகண்டன் முத்துப்பாண்டி என்ற இரண்டு மகன்களும் உள்ளார்கள் இந்நிலையில் தன்னுடைய தகப்பனார் வழிவந்த சொத்துக்கள் அனைத்தையும் தனது வயதான காலத்தில் தனது மகள் காப்பாற்றுவார் என்ற எண்ணத்தில் அய்யம்மாள் தனது மகள் மங்கையர்க்கரசி பெயரில் அனைத்து சொத்துக்களையும் தானமாக எழுதி வைத்துள்ளார் 

இதனை தொடர்ந்து மங்கையர்க்கரசியின் கணவர் பெரியசாமி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அடித்துக் கொலை செய்துவிட்டு அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய பெயரிலும் தன்னுடைய மகன்கள் பெயரிலும் மாற்றி விட்டு தற்பொழுது வயதான காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றி சொத்துக்களை அபக்கரித்தும் விட்டதாக கூறி பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை  வயதான காலத்தில் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அனாதையாக விட்டுவிட்ட மருமகன் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் தானமாக கொடுத்த சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் பெயரில் மாற்றியதை ரத்து செய்து மீண்டும் எனக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யம்மாள் மனு கொடுத்துள்ளார்.


அய்யமாலின் மருமகன் பெரியசாமி என்பவர்  பெரியகுளம் பகுதியில் விவசாய துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் அவர் மீது துறை வாரியான நடவடிக்கை நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad