காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயத்த நபர் மீது வழக்குப்பதிவு புது மாப்பிள்ளை தலைமறைவு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயத்த நபர் மீது வழக்குப்பதிவு புது மாப்பிள்ளை தலைமறைவு.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் ராஜு இவருடைய மகன் திருமாவளவன் 'இவர் திருப்பூர் பகுதியில் தனியார்| கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளாதாக தெரிகிறது. அதே நேரு நகரைச் சேர்ந்த சுதா என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது சுதா ஏற்கனவே ஒரு நபரை திருமணம் செய்து பிரச்சனை இருப்பதை திருமாவளவன் என்பவரிடம் கூறியுள்ளாதாகவும் அதற்கு பரவாயில்லை அத்தனை பிரச்சனையும் எனக்கு தெரியும் உன்னை எனக்கு பிடித்து விட்டதால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி சுதா என்பவரை அவர் பணியாற்றிய மில்லில் இருந்து பலமுறை  பழனி அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது


இந்நிலையில் கடந்த சில வாரங்களில் திருமாவளவன் சுதாவிடம் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் இதனால் சந்தேகம் அடைந்த சுதா திருமாவளவன் சம்பந்தப்பட்ட விவரங்களை சேகரிக்கும் பொழுது அவர் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயத்து  வரும் 7-ம் தேதி திருமணம் நடைபெறுவதைஅறிந்த சுதா தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய திருமாவளவன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது வீட்டில் உள்ள மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இது சம்பந்தமாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரிய குளம் காவல்துறையினர் ராஜூ மகன் திருமாவளவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.


இந்த விபரத்தை தெரிந்து கொண்ட ராஜுமகன் திருமாவளவன் இரவோடு இரவாக தலைமறைவு ஆகியுள்ளார் மேலும் பாதிக்கப்பட்ட சுதா தன்னை திருமாவளவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையெனில் எனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என தெரிவித்துள்ளார் அதே சமயம் பெண்ணை ஆசை வார்த்து கூறி பலமுறை தனிமையில் சந்தித்து சுதாவை ஏமாற்றிய திருமாவளவன் மற்றொரு பெண்ணை  திருமணம் செய்ய முயற்சித்த தகவல் பெரியகுளம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தலைமறைவான ராஜு மகன் திருமாவளவனை பெரியகுளம் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad