போராட்டத்தின் போது மதுவிற்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தேர்தல் வாக்குரிமையின் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்த நிலையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு பூரணமதுவிலக்கு அமல்படுத்தாத காரணத்தினால் ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தமிழக முழுவதும் மதுவை ஒழித்திட வேண்டுமென போராட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர்.
சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மதுபாட்டில் உடைக்கப்பட்டது. பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment