எழுந்தோறும் ஸ்டாலின் குரல் என்றவீடு தூரம் சென்று பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து விதமான மக்கள் நலத்திட்டங்களை வீட்டில் உள்ள பெண்களுக்கும் பொது மக்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் மகளிர் உரிமைத்தொகை மாணவர்களுக்கான திட்டங்கள் பெண்களுக்கான திட்டங்கள் அனைவருக்கும் வீடும் வீடு கட்டி தரக்கூடிய திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் தாமாக முன்வந்து வரவேற்று திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி தென்கரை கடைவீதி மற்றும் பெரியகுளத்தின் பிரதான தென்கரைப் பகுதிகளில் வீதியாக சென்று பரப்புரை செய்யப்பட்டது, இதில் திமுக பெரியகுளம் நகர பொறுப்பாளர் அருணாச்சலம், திமுக நகர அவைத் தலைவர் வெங்கடாசலம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகர துணைச் செயலாளர்கள் சேதுராமன், சரவணன், பொருளாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டியன், செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக்., இளைஞர் அணி ரகுமான், மாணவரணி உள்ளிட்ட நிர்வாகிகளோடு பிரதிநிதிகள், மகளிர் அணி என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment