ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1500 க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 August 2024

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1500 க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன


 ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1500 க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன .


ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள 4 கிராம ஊராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏ பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள். 


ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர்‌ திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே குடையின் கீழ் பெற தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் 31 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த மாதம் 11ம்‌ தேதி முதல் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள டி.ராஜகோபாலன்பட்டி, டி.சுப்புலாபுரம், திம்மரசநாயக்கனூர், புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட 4 கிராம ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்காக மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் ஆண்டிபட்டி - புள்ளிமான்கோம்மை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 


  இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடக்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நேரில் சென்று பார்வையிட்டனர். மனு அளித்து உடனடியாக தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா மற்றும் எம்எல்ஏ மகாராஜன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.


 இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் போஸ், ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் டி.ராஜகோபாலன்பட்டி‌ வேல்மணி, டி.சுப்புலாபுரம் அழகுமணி, திம்மரசநாயக்கனூர் அக்ஷயா, புள்ளிமான் கோம்பை தவசி மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad