ஆண்டிபட்டி ரோட்டின் ஓரங்களில் நடைபாதை மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 August 2024

ஆண்டிபட்டி ரோட்டின் ஓரங்களில் நடைபாதை மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.


ஆண்டிபட்டி ரோட்டின் ஓரங்களில் நடைபாதை மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. ஆண்டிப்பட்டியில் பைபாஸ் ரோடு வசதி இல்லை. போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண்டிபட்டியில் ரோட்டில் ஓரங்களில் இருந்த நூற்றாண்டை கடந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டன. ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் விரிவாக்கம் செய்த இடங்களில் கடைகளை அமைத்து ஆக்கிரமித்து விட்டனர். விளம்பர பலகைகள் போர்டுகளால் நகர் பகுதியில் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகிறது. தேனி கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி.,சிவபிரசாத் உத்தரவில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பஸ் ஸ்டாண்டிலிருந்து சக்கம்பட்டி வரை ரோட்டின் ஓரங்களில் ஆக்கிரமித்து இருந்த விரிவாக்கம் செய்யப்பட்ட கடைகள், விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad